ஞாயிறு, 14 ஜூன், 2015

பொரளை மஸ்ஜித் மீதான் தாக்குதல் : சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு பொரளை பேஸ் லைன் ஜும்ஆ  மஸ்ஜித்  மீது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என பொலிஸ்  ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். https://lankamuslim.files.wordpress.com/2015/05/po3.jpgசந்தேநக நபர்கள் இருவரும் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இவர்களில் ஒருவர் பொரளை பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றையவர் நாவல பகுதியை சேர்ந்தவர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அதேவேளை மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ்  ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்
பொரளை  மஸ்ஜித்  மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை இடம்பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக