திங்கள், 22 பிப்ரவரி, 2016

பலஸ்தீனத் தாயின் ஈமானிய உணர்வு

இது  பலஸ்தீன் காஸா பிரதேசத்தில் இடம்பெற்ற  உண்மைச் சரித்திரம் .

பலஸ்தீன் காஸாப் பிரதேசத்தில் ஒரு  பெண் குழந்தைப் பாக்கியமின்றி  பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தாள் .  அவளுக்கு சமூகம் வைத்த பெயர் "மலடி "  இப்படி சமூகம்  அவளைப் பார்க்கலானார்கள் . இவளுக்கும் உள்ளத்தில் ஒரு கவலை எல்லோரும் அவர்களுடைய பிழைகளுடன் சந்தோசமாக இருக்கின்றார்கள் எனக்கு ஒரு குழந்தை இல்லையே !



பல ஆண்டு காலம் கழிந்த பிறகு அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது  . அவளுக்கு மிகவும் சந்தோசம் . நான் மலடி இல்லை என்று !
மூன்று மாதங்கள் கழித்த பிறகு இஸ்ரேலிய இராணுவம் காஸா பிரதேசத்தை தரைவழியாகவும் , வான்வழியாகவும் பேரழிவுதரும் பல  இரசாயன ஆயுதங்களால் தாக்கியது .

அந்தத் தாக்குதலில் காஸாப் பிரதேசத்தில் கட்டப்பட்ட 50 % மான  வீடுகள் அழிக்கப்பட்டது . காஸாவின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது .  2000 த்திற்கும் அதிகமானோர் ஷஹீதாக்கப்பட்டார்கள் ஸுப்ஹானல்லாஹ் !

இந்த இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் அந்தப் பெண்ணின் குழந்தையும் ஷஹீதானது . அவள் தாய்தானே அவளுக்குத்தான் தெரியும் அவள் பட்ட கஷ்டங்கள் .  அப்போது அவளை ஆறுதல் படுத்துவதற்காக அவளது உறவினர்கள் மற்றும் அன்டைவீட்டார்கள் அனைவரும் வந்திருந்தார்கள் . அப்போது அவர்களுக்கு அவள் சொன்ன அந்த வார்த்தை இருக்கின்றதே !! ஸுப்ஹானல்லாஹ்

எனக்கு பிள்ளை கிடைக்கும்முன் ஒரு கவலை இருந்தது  . பலஸ்தீனில்  ஒவ்வொரு தாயும் தங்களுடைய  பிள்ளைகளை  இஸ்ரேலுடன் போராட அனுப்பி வைக்கின்றார்கள்  .  இவர்கள்தான் இஸ்லாத்திற்காக ஷஹீதாக்கப்பட்டவர்களின் தாய் என்று இறைவனிடம் பெருமையாகப் பேசப்படுவார்கள் . ஆனால் எனக்கு ஒரு பிள்ளை இல்லையே இஸ்ரேலுடன் போராட அனுப்புவதற்கு என்று நான் பல நாட்களாக  கவலைப்பட்டதுன்டு .

ஆனால் இப்போது எனக்கு அந்தக் கவலை இல்லை ! என்என்னுடைய  மகனும் இஸ்ரேலுடனான யுத்தத்தில் ஷஹீதாக்கப் பட்டுள்ளான் . எனக்கும் ஷஹீதின் தாய் என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது என்று சந்தோசமாகச் சொன்னாள் .
ஸுப்ஹானல்லாஹ் !
எமது தாயென்றால்  எப்படிப் பேசிருப்பாள்  ?

இதுதான் பலஸ்தீனில் இருக்கின்ற ஒவ்வொரு தாயினதும் உணர்வு .

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக