வியாழன், 5 மே, 2016

அமைச்சர் றிசாத் நோர்வே தேர்தல் நிபுணர் வொலன்ட் சந்தித்தார்.

உலக நாடுகள் பலவற்றின் தேர்தல் மறு சீரமைப்பு மற்றும் அரசியல் அமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வம் காட்டி அதற்கு உதவி வரும் நோர்வே நிபுணரான ஆர் எம் வொலன்ட் இன்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத்  பதியுதீனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
மாற்றுக்கொள்கைகளுக்கான தேசிய நிலையத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள நிபுணர் ஆர் எம் வொலன்ட் இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தனது கருத்துக்களையும் ஆவண ரீதியான சான்றுகளையும் அமைச்சரிடம் முன்வைத்தார்.
நேபாளம் போன்ற தென் கிழக்காசிய நாடுகளில் பரீட்சித்துப்பார்த்து வெற்றி கண்ட முறைகளையும் தனது அனுபவங்களையும் விரிவாக விளக்கி இருந்தார்.
தேர்தல் மறுசீரமைப்பில் தமது கட்சி முன்னெடுத்து வரும் திட்டங்களை விளக்கிய அமைச்சர் ரிசாத்  சிறுபான்மை மக்களுக்கு புதிய முறைமையினால் எத்தகைய பாதிப்புகளும் வரக்கூடதென்பதில் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டுத்தலைவர்களிடம் இது தொடர்பில் தமது கட்சி சுட்டிக்காட்டியிருப்பதாக குறிப்பிட்டஅவர், சிறுகட்சிகளான ஜே.வி.பி, ஹெல உறுமய ஆகியவற்றுடனும் சிறுபான்மைச் சகோதரக் கட்சிகளுடனும் தாங்கள் பேச்சு நடாத்திவருவதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் பங்கேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன், சிறுபான்மை மக்களுக்கு உகந்த தேர்தல் முறைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக